Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பாடல் 4


மடையில் வாளைபாய - பாடல் 4

தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்

மழுக்கொள் செல்வன் மறி சேர் செங்கையன்

குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா

இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே

விளக்கம்:

தழுக்கொள் பாவம்=உயிரினை உறுதியாக பற்றிக் கொண்டிருக்கும் தீய வினைகளும் அவைகளால் ஏற்படும் தீமைகளும்; மறி=மான் கன்று; இழுக்கா வண்ணம்=தவறாத வண்ணம்;

பொழிப்புரை:

மனிதர்களே, உங்களை இறுகப் பற்றியுள்ள தீய வினைகளும் அந்த வினைகளால் ஏற்படும் துன்பங்களும், தங்களது பிடிப்பினில் தளர்ந்து உங்களை விட்டு விலக வேண்டும் என்று நீங்கள் விரும்புவீர்களாயின், மழுப்படையினைத் தாங்கிய செல்வனும், மான் கன்றினைத் தனது சிவந்த கையினில் ஏந்தியவனும், கூட்டமாக உள்ள பூதப் படையினால் சூழப் பட்டவனும், கோலக்கா தலத்தில் உறைபவனும் ஆகிய இறைவனை தவறாமல் வழிபட்டு வணங்கி வாழ்த்துவீர்களாக.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - பாடல் 4


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: