Go Back

22/03/21

மடையில் வாளைபாய - பாடல் 8


மடையில் வாளைபாய - பாடல் 8


எறியார் கடல் சூழ் இலங்கைக் கோன் தனை

முறியார் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்

குறியார் பண் செய் கோலக்காவையே

நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே

விளக்கம்:

எறியார் கடல்=அலைகள் எறியும் கடல்; தடக்கை=அகன்ற கைகள், இங்கே தோள்கள் என்று நாம் பொருள் கொள்ளவேண்டும்.

பொழிப்புரை:

உயரமான அலைகள் பலவற்றை வீசி எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கைத் தீவின் தலைவனாகிய அரக்கன் இராவணனின் அகன்ற தோள்களை முறித்து நெருக்கிய இறைவன் சிவபெருமான். இந்த இறைவனை, குறியாகக் கொண்டு பண்கள் பொருந்திய பாடல்களை முறையாக இசைத்து வழிபடும் அடியார்களின் வினைகள் முற்றிலும் நீங்கிவிடும்.

Tag :

#thirugnanasambandhar thevaram
#Madaiyil Vaalai
#sambandhar thevaram.
#Thiththikkum thevaram
#om namasivaya
#thevaram

மடையில் வாளைபாய - பாடல் 8


Written by: என். வெங்கடேஸ்வரன்
Share this news: